சேலம்: கருமந்துறை, அரசு ஐ.டி.ஐ.,யில் காலியாக உள்ள, பணிமனை உதவியாளர் பணியிடத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து, கலெக்டர் சம்பத் கூறியிருப்பதாவது: சேலம் மாவட்டம்,கருமந்துறையில் செயல்பட்டு வரம் அரசு பழங்குடியினர் ஐ.டி.ஐ.,யில், தாழ்த்தப்பட்ட வகுப்பினர்,அருந்ததியர், பெண்கள், முன்னுரிமை பெற்றவர் இன ஒதுக்கீட்டில், பணிமனை உதவியாளர் பிட்டர் பணியிடம் காலியாக உள்ளது.
இதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 2016, ஜூலை 1ம் தேதியன்று அரசு நிர்ணயித்த 35 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும். கல்வித்தகுதி, பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன், பிட்டர் தொழில் பிரிவில், என்.டி.சி., அல்லது என்.ஏ.சி., தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க விரும்புவோர் பெயர், கல்வித்தகுதி, இனம், முன் அனுபவம் ஆகியவற்றின் சான்றிதழ் நகல் மற்றும் வீட்டு முகவரி, அலைபேசி எண்ணுடன் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, வரும், 23ம் தேதி மாலை 5 மணிக்குள், முதல்வர், அரசு மகளிர் ஐ.டி.ஐ., சேலம் என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
மேலும் விவரம் பெற, 0427-2403787 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
www.tnpgtakarurdt.in