Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Tuesday, September 13, 2016

கிடைத்த பரிசுத்தொகையில் தான் படித்த அரசு பள்ளிக்கு ரூ.30 லட்சம் நிதி

ரியோ பாராலிம்பிக்கில் தங்க பதக்கம்வென்ற மாரியப்பன் வரும் 22ம் தேதி சேலம்திரும்புகிறார். 
 மத்திய, மாநில அரசுகள்அறிவித்துள்ள பரிசு தொகையில் இருந்து,தான் படித்த அரசு பள்ளிக்கு நிதியுதவிசெய்ய அவர் முடிவு செய்திருப்பதாக அவரதுபயிற்சியாளர் தெரிவித்துள்ளார். பிரேசில்
நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில்,மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக்போட்டிகள் நடந்து வருகிறது. இதில், சேலம்மாவட்டம் ஓமலூர் தீவட்டிப்பட்டி அடுத்தபெரியவடகம்பட்டியை சேர்ந்த மாரியப்பன்,உயரம் தாண்டுதல் போட்டியில், 1.89 மீட்டர்தாண்டி தங்க பதக்கம் வென்று சாதனைபடைத்தார். அவருக்கு தமிழக அரசு ரூ.2கோடியும், மத்திய விளையாட்டு அமைச்சகம்ரூ.75 லட்சமும் பரிசு அறிவித்துள்ளன.மாரியப்பன் பெரியவடகம்பட்டி அரசுமேல்நிலைப்பள்ளியில் படித்தவர். ஆரம்பகாலத்தில், மாரியப்பனுக்கு பயிற்சிஅளித்தவரான அந்த பள்ளியின் உடற்கல்விஆசிரியர் ராஜேந்திரன் கூறியது:

வரும் 22ம் தேதி மாரியப்பன் தங்கவேலுசேலம் திரும்புகிறார். அவர் சொந்த ஊர்திரும்புகையில் சிறப்பான வரவேற்புஅளிக்க முடிவு செய்துள்ளோம். மாரியப்பன்தங்கவேலுவுக்கு மத்திய, மாநில அரசுகள்பரிசுகள் அறிவித்திருப்பதுமகிழ்ச்சியளிக்கிறது. இதுதொடர்பாகஅவரிடம் பேசினேன். பரிசு பணத்தில் ரூ.20முதல் ரூ.30 லட்சம் வரை, அவர் படித்தபெரியவடகம்பட்டி அரசுமேல்நிலைப்பள்ளியின் வளர்ச்சிக்குஅளிக்க முடிவு செய்துள்ளார். பள்ளியின்தரத்தை உயர்த்தவும், விளையாட்டுமைதானத்தை மேம்படுத்தவும் இந்த நிதிசெலவிடப்படும் என்றார். சொந்த ஊரில்சொந்த வீடு: மாரியப்பன் தங்கவேலுவின்தாய் சரோஜா கூறுகையில், நாங்கள் மிகவும்சிறிய வாடகை வீட்டில் வசித்து வருகிறோம்.பரிசாக கிடைத்துள்ள பணத்தில், இதேகிராமத்தில் சொந்த வீடு ஒன்றை கட்ட முடிவுசெய்துள்ளோம் என்றார்.
www.tnpgtakarurdt.in