Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Thursday, September 08, 2016

புத்தகங்களை படிக்க 15 ஆண்டுகள் போதாது: பிரணாப் முகர்ஜி

ஜனாதிபதி மாளிகையிலுள்ள புத்தகங்களை படிக்க 15 ஆண்டுகள் போதாது என ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.


டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது: ஜனாதிபதி ஆவதற்கு முன் ஜனாதிபதி மாளிகை எப்படி இருக்கும் எனத் தெரியாது. இப்பதவியேற்பதற்கு 2 நாட்களுக்கு முன் ஜனாதிபதி மாளிகை எவ்வாறு செயல்படுகிறது என்பது பற்றி அறிய என் மகள் சர்மிஸ்தாவை அனுப்பி தகவல் சேகரித்தேன்.

ஜனாதிபதி மாளிகையில், அக்., 2ம் தேதி முதல், செயல்பாட்டிற்கு வரும் அருங்காட்சியகத்தில், அற்புதமான பல கலைப் பொருட்கள் இடம் பெற்றுள்ளன. வெளிநாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் பரிசளித்த பொருட்களும் இடம் பெற்றுள்ளன. 15 ஆண்டுகள் ஆனாலும், இங்குள்ள நுாலக புத்தகங்களை படித்து முடிக்க முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

www.tnpgtakarurdt.in