Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Monday, January 25, 2016

3 மருத்துவ மாணவிகள் தற்கொலை; நடந்தது என்ன? பரபரப்பு தகவல்

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே 3 மருத்துவ மாணவிகள் தற்கொலை செய்து கொண்டது ஏன் என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் இந்த மாணவிகள் சாவில் மர்மம் இருப்பதாக பெற்றோர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். மேலும் மாணவிகள் உடலை பரிசோதனை செய்ய சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் கோரியுள்ளனர் .
கள்ளக்குறிச்சி சின்னசேலம் அடுத்த பங்காரம் பகுதியில் இயற்கை மருத்துவ யோகா கல்லூரி உள்ளது . இங்கு அடிப்படை வசதிகள் இல்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக மாணவிகள் பல முறை புகார் அளித்துள்ளனர் .மாவட்ட கலெக்டரிடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரை தெரிவித்த சில மாணவிகள் சிலருக்கு நெருக்கடிகள் வந்ததாக தெரிகிறது. .
www.tnpgtakarurdt.blogspot.in