மருத்துவம் படிக்க 31,332 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக, மருத்துவ கல்வி இயக்குநர் கீதா லட்சுமி கூறியுள்ளார். மேலும் அவர், கடந்த ஆண்டை காட்டிலும் 332 பேர் கூடுதலாக விண்ணப்பம் செய்துள்ளனர். சென்னை ஒமந்தூரார் வளாக அரசு மருத்துவ கல்லூரியை இந்த ஆண்டே துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசு ஒதுக்கீட்டில் உள்ள மருத்துவ இடங்களில் எண்ணிக்கை 2555 ஆகும் எனவும் கூறினார்.