தமிழகத்தில் காளைகள் போல், நாட்டு நாய்களுக்கும் எப்போதுமே தனி சிறப்பிடம் உண்டு. வரலாற்றில் பல இடங்களில் தமிழகத்து நாட்டு நாய்கள் வீரத்தை, விசுவாசத்தை காட்டியதாக விவரிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய பெருமைவாய்ந்த நாட்டு நாய் இனம் தற்போது அழிவைச் சந்தித்து வருகிறது.
இவைகளை காப்பாற்றி மீண்டும் நாட்டு நாய் இனங்கள் பெருக தமிழக அரசு கால்நடை அபிவிருத்தி, பராமரிப்புத் துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.
வெளிநாட்டு நாய் வகைகளை விட வீரம் நிறைந்தவை தமிழகத்து நாட்டு நாய் இனங்கள். வெளிநாட்டு நாய் இனங்களான ஜெர்மன் ஷெப்பர்டு, லேப்ரடார், பக் போன்றவைகளுக்குப் பயிற்சி அளித்தால் மட்டுமே திறமையாகச் செயல்படும். ஆனால் தமிழகத்து நாட்டு நாய் இனங்களான சிப்பிப்பாறை, கன்னி, கோம்பை, ராஜபாளையம் வகை நாய்கள் பிறப்பிலேயே திறமை படைத்தவை. பயிற்சி இல்லாமலேயே இவை திறமையாகச் செயல்படுவது பல நாடுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இவ்வளவு சிறப்புமிக்க தமிழக நாட்டு நாய் இனங்கள் தற்போது வேகமாக அழிந்து வருகின்றன.
இத்தகைய பெருமைவாய்ந்த நாட்டு நாய் இனம் தற்போது அழிவைச் சந்தித்து வருகிறது.
இவைகளை காப்பாற்றி மீண்டும் நாட்டு நாய் இனங்கள் பெருக தமிழக அரசு கால்நடை அபிவிருத்தி, பராமரிப்புத் துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.
வெளிநாட்டு நாய் வகைகளை விட வீரம் நிறைந்தவை தமிழகத்து நாட்டு நாய் இனங்கள். வெளிநாட்டு நாய் இனங்களான ஜெர்மன் ஷெப்பர்டு, லேப்ரடார், பக் போன்றவைகளுக்குப் பயிற்சி அளித்தால் மட்டுமே திறமையாகச் செயல்படும். ஆனால் தமிழகத்து நாட்டு நாய் இனங்களான சிப்பிப்பாறை, கன்னி, கோம்பை, ராஜபாளையம் வகை நாய்கள் பிறப்பிலேயே திறமை படைத்தவை. பயிற்சி இல்லாமலேயே இவை திறமையாகச் செயல்படுவது பல நாடுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இவ்வளவு சிறப்புமிக்க தமிழக நாட்டு நாய் இனங்கள் தற்போது வேகமாக அழிந்து வருகின்றன.