அவசர சட்டம் பிறப்பிப்பது தொடர்பாக தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ், இன்று இரவு சென்னை வருகிறார்.
அவசர சட்டம்:
ஜல்லிக்கட்டு நடத்த ஏற்ற வகையில், அவசர சட்டம் கொண்டு வர, முதல்வர் பன்னீர்செல்வம், நடவடிக்கை எடுத்துள்ளார். ஜனாதிபதி ஒப்புதலுடன், மாநில கவர்னர், அவசர சட்டத்தைப் பிறப்பிப்பார். இன்று அல்லது நாளை அவசர சட்டம் பிறப்பிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.