ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக உர்ஜித் பட்டேல் நேற்று பதவியேற்றுக் கொண்டுள்ளார். இவர் அடுத்த 3 ஆண்டுகள் ரிசர்வ் வங்கி கவர்னர் பதவியில் நீடிப்பார்.
ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்த ரகுராம் ராஜனின் பதவிகாலம் நேற்றுடன் முடிவடைந்ததை அடுத்து, இன்று 24வது கவர்னராக உர்ஜித் பட்டேல் பதவியேற்றுக் கொண்டுள்ளார்.இவர்கள் 2013ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ரி்சர்வ் வங்கியின் துணை கவர்னராக இருந்து வந்தார்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று மும்பையில் விடுமுறை என்பதால் இவர் பதவியேற்பதற்கான விழா கடந்த வாரம் நடந்தது. நேற்று முறைப்படி ரிசர்வ் வங்கியின் பொறுப்பை உர்ஜித் பட்டேல் ஏற்றுக் கொண்டுள்ளார்.
www.tnpgtakarurdt.in