Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Tuesday, February 02, 2016

தாயைப் போல பிள்ளை..!

தாயின் ஒவ்வொரு மாற்றமும் கருவில் இருக்கும்
குழந்தைக்கும் ஏற்படும். உடலாலும், மனதாலும்
கருவுற்ற பெண்ணிற்கு சிறு பாதிப்பு என்றாலும் அது
குழந்தையின் வளர்ச்சியில் பல பாதிப்புகளை
ஏற்படுத்துகிறது.
சில குழந்தைகள் 2 அல்லது 3 வயது வரை எந்த
பாதிப்புமில்லாமல் வளரும். ஆனால் திடீரென்று
காய்ச்சல் அடிக்கும், பின் அந்தக் குழந்தையின்
இடுப்புப் பகுதிக்குக் கீழ் செயலிழக்க ஆரம்பிக்கும்.
இதன் காரணத்தை அகத்தியர் தன்னுடைய
பாலவாகடத்தில் தெளிவாகக் கூறியுள்ளார்.
அதாவது ஒரு பெண் எப்போது கருவுறுகிறாளோ
அன்றிலிருந்து அந்தப் பெண்ணிற்கு உண்டாகும்
மாற்றங்கள் கருவிலிருக்கும் குழந்தைக்கும் உண்டாகும்.
இவ்வாறு ஏற்படும் பாதிப்புகள் அல்லது மாற்றங்கள்
குழந்தை பிறந்த பின் 2 அல்லது மூன்று ஆண்டுகள்
வளர்ந்த பின் கூட ஏற்படும்.
ஒரு குழந்தை முழுமையாக வளர்ச்சியடையவும்
எதிர்காலத்தில் மனதாலும் உடலாலும் ஊனமில்லாமல்
பிறந்து வளரவும் கருவுற்ற பெண்கள் சில
நடைமுறைகளைக் கடைப்பிடித்து வரவேண்டும்.
1.கருவுற்ற பெண்கள் குளிர்ந்த நீரில் குளிக்கக்
கூடாது. ஈரத் தலையுடன் இருப்பதை தவிர்ப்பது
நல்லது.
2.குளிர்ந்த காற்று, வாடைக்காற்று, பனிக்காற்று
வீசும் இடங்களில் நிற்கக் கூடாது. சன்னல் ஓரம்
அதிக நேரம் நிற்கக் கூடாது.
3.மழையிலோ மழைச் சாரலிலோ நனையக் கூடாது.
அவ்வாறு நனைய நேரிட்டால் வீட்டிற்கு வந்தவுடன்
வெந்நீர் வைத்து இளம் சூடான நீரில் குளித்து
உடலையும் தலையையும் நன்கு துடைக்கவேண்டும்.
4.எப்போதும் நன்கு காய்ச்சி ஆறிய நீரைப் பருகுவது
நல்லது. அதிக நீர் அருந்தவேண்டும். அதற்காக ஒரே
நேரத்தில் அதிக நீர் அருந்தக்கூடாது. இடைவெளி
விட்டு நீர் அருந்த வேண்டும்.
5.அதிக சூடான நீரை அருந்துதல் நல்லதல்ல.
குளிர்சாதனப் பெட்டி (பிரிட்ஜ்) யில் வைத்த
குளிர்பானங்கள், குளிர்ந்த நீர் மற்றும் குளிர்ந்த
உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும். இதனால்
சளிப் பிடிக்காமல் பார்த்துக்கொள்ளலாம். கருவுற்ற
பெண்ணுக்கு சளிப் பிடித்தால் அது கருவில் இருக்கும்
குழந்தையைப் பாதிக்கும்.
6.கருவுற்ற பெண்கள் சிலபேர் குமட்டல் வாந்தி
காரணமாக உணவை தவிர்ப்பார்கள். அப்படி
தவிர்ப்பதால் குழந்தைக்குத் தேவையான சத்துக்கள்
கிடைக்காமல் போகும்.
7.அதிக காரம், புளிப்பு உள்ள உணவுகளை தவிர்க்க
வேண்டும். எளிதில் ஜீரணமாகும் உணவுகளை உண்ண
வேண்டும்.
8.சத்து மாத்திரைகளை நேரடியாக உபயோகிக்கக்
கூடாது. கீரைகள், பழங்கள், தானியங்கள் காய்கறிகள்
போன்றவற்றில் தேவையான சத்துக்கள் அனைத்தும்
கிடைக்கின்றன. சத்து மாத்திரைகளை உபயோகித்தால்
அவை சில நேரங்களில் தாயின் உடல்
சமநிலைப்பாட்டை மாற்றி கருவில் உள்ள குழந்தையை
பாதிக்க ஆரம்பிக்கும். இதனால் குழந்தைகள் பிறந்து
சில நாட்கள் நன்றாக இருந்து பின்பு பாதிப்பை
ஏற்படுத்தும். சில குழந்தைகளுக்கு உடல் உறுப்புகள்
பாதிக்கப்படும்.
9.மதிய உணவில் ஏதாவது ஒரு கீரையை சேர்த்துக்
கொள்ள வேண்டும். அதிக சூடு, அதிக குளிர்ச்சி
தரும் பழங்களைத் தவிர்த்து மற்ற பழங்களைச்
சாப்பிடுவது நல்லது. ஜூஸ் செய்து கூட
அருந்தலாம்.
10.கர்ப்பிணிப் பெண்கள் சரியான நேரத்திற்கு உணவு
அருந்த வேண்டும். உணவு உண்டவுடன் தூங்கக்
கூடாது. சற்று ஓய்வெடுத்தாலே போதுமானது.
முடிந்தவரை பகல் தூக்கத்தைத் தவிர்ப்பது நல்லது.
11.தொலைக்காட்சியை அதிக நேரம் பார்த்துக்
கொண்டிருக்கக் கூடாது. மனதைப் பாதிக்கும்
காட்சிகளைப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.
12.மழை, இடி, மின்னல் ஏற்படும் போது வெளியே
செல்வதைத் தவிர்க்க வேண்டும்.அதுபோல் அதிக
வெயிலிலும் அலையக் கூடாது. மூச்சு திணறும்
அளவு மக்கள் நெருக்கடி உள்ள திருவிழா, கடை
வீதிகளுக்கு செல்வது நல்லதல்ல.
13.அதிக சப்தம் போட்டு பேசுவதால் வயிற்றில் உள்ள
கருவிற்கு சில அதிர்வுகள் ஏற்பட வாய்ப்புண்டு.
14.இரவு நேரங்களில் அதிக வெளிச்சமில்லாத
பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
கரு என்பது மென்மையான பூ போன்றது. அதை
அழகாக பாதுகாப்பாக பெற்றெடுக்க வேண்டியது ஒரு
தாயின் கடமை.
மிதமான வேலை, மிதமான நடை, மிதமான
உடற்பயிற்சி, அமைதியான மனநிலையே ஆரோக்கிய
குழந்தைக்கு முதல் படியாகும்.