குரூப் 1 தேர்வுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர், உதவி வணிக வரி அலுவலர்கள், மாவட்ட பதிவாளார்கள் உள்ளிட்ட 74 பணியிடங்களை நிரப்புவதற்காக இந்த தேர்வு நடத்தப்படுகிறது.
இத்தேர்வுக்கு ஆகஸ்ட் 9-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். முதல்நிலை, முதன்மை, நேர்காணல் என 3 கட்டங்களாக இந்த தேர்வு நடைபெறும்.
முதல்நிலை தேர்வு நவம்பர் 8-ம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.