Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Friday, May 08, 2015

கரூர் மாவட்டத்தில் அம்மா திட்ட முகாம்

கரூர் மாவட்டத்தில், அனைத்து தாலுகாக்களிலும் வருவாய்த்துறை சார்பில், 3ம் சுற்று "அம்மா திட்ட முகாம்' இன்று நடக்கிறது.
முகாமில், தாசில்தார், தனி தாசில்தார், (சமூக பாதுகாப்புத் திட்டம்) துணை தாசில்தார், வட்ட வழங்கல் அலுவலர், ஆர்.ஐ., வி.ஏ.ஓ.,க்கள் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
முகாமில், பொதுமக்கள், தங்களின் கோரிக்கைகளை மனுக்களாக அளிக்கலாம். மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, தகுதியான நபர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட உள்ளது.
உடனடி தீர்வு காண இயலாத மனுக்கள் மீது தொடர் நடவடிக்கை மேற்கொண்டு, ஒரு மாதத்துக்குள் உரிய தீர்வு காணப்படும்
கரூர் தாலுகாவில், கே.பிச்சம்பட்டி வி.ஏ.ஓ., அலுவவலகம், மண்மங்கலம் தாலுகா கிழக்கு ஆண்டாங்கோவில் மந்தை, குளித்தலை தாலுகா பொய்யாமணி பஞ்சாயத்து அலுவலகம், கிருஷ்ணராயபுரம் முத்துரெங்கம்பட்டி பஞ்., யூனியன் துவக்கப்பள்ளி, கடவூர் தாலுகா ஆதனூர் பஞ்சாயத்து அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் நடக்கிறது.