Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Sunday, September 18, 2016

விரிவுரையாளர் வினாத்தாள் 'அவுட்' தேனி பெண் சிக்கினார் !

ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் பணிக்கு மதுரையில் நடந்த தேர்வில், 'வாட்ஸ் ஆப்'பில் கேள்விகளை அனுப்பிய தேனி பெண் பிடிபட்டார்.
ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) சார்பில், மதுரையில் ஒன்பது மையங்களில், இந்த தேர்வு நேற்று நடந்தது. தனியார் பள்ளி ஒன்றில் தேனியை சேர்ந்த ராகப்பிரியா, ஆங்கில பாடத் தேர்வு எழுதினார்.
அரை மணி நேரம் கடந்த நிலையில், சட்டைக்குள் வைத்திருந்த அலைபேசியை எடுத்த போது பிடிபட்டார். இதுகுறித்து தேர்வு கண்காணிப்பாளர் விசாரித்தார். அப்போது, ராகப்பிரியா முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்; அவரது அலை
பேசியில் உள்ள தகவல்களை கண்காணிப்பாளர் ஆய்வு செய்த போது, வினாத்தாள் பக்கங்களை புகைப்படம் எடுத்து 'வாட்ஸ் ஆப்'பில் அனுப்பியது தெரிந்தது.விசாரணை நடத்திய போதே, வினாக்காளுக்கான விடை 'வாட்ஸ் ஆப்'பில் வந்ததை கண்டு, கண்காணிப்பாளர் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து, கல்வி ஆராய்ச்சி நிறுவன இணை இயக்குனர் குப்புசாமி, தேர்வு வாரிய உறுப்பினர் ராஜ
ராஜேஸ்வரி தலைமையிலான குழு அங்கு விசாரணை நடத்தியது. பின், அலைபேசியை பறிமுதல் செய்து ராகப்பிரியாவை வெளியேற்றினர்.இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது.'குரூப்'பில் விடை : தேர்வு துவங்கிய அரை மணி நேரத்துக்குள், வினாக்களை ராகப்பிரியா அனுப்பியுள்ளார். இதனால், அந்த 'வாட்ஸ்
ஆப் குரூப்'பில் உள்ள மற்ற தேர்வர்களும் விடையை பார்த்திருக்கும் வாய்ப்பு உள்ளது.