Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Tuesday, August 23, 2016

*கொல்கத்தா பாடசாலை ஒன்றினால் பெற்றோருக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் ஒன்று*....

அன்பார்ந்த பெற்றோர்களே!

உங்களுடைய பிள்ளைகளுக்கான பரீட்சை விரைவில் ஆரம்பமாகவுள்ளது.

பிள்ளைகள் சிறப்பாக பரீட்சையை செய்ய வேண்டும் என்பதில் ஆர்வமாய் இருப்பீர்கள் என நம்புகின்றோம்.

எனினும் இந்த விஷயங்களையும் கவனத்திற் கொள்ளுமாறு பணிவாய்க் கேட்டுக் கொள்கின்றோம்.

பரீட்சையில் தோற்றுப் போகும் மாணவர்களுக்குள்
*ஒரு கலைஞன்* இருப்பான்
அவனுக்கு *கணிதம்* தேவைப்படாது.

அங்கே *ஒரு தொழிலதிபர்* இருப்பான்
அவனுக்கு *வரலாறு  இலக்கியம்*முக்கியமில்லை.

*ஒரு இசைஞானி* இருப்பான்
அவனுக்கு *இரசாயனவியல்* அவசியமிறாது.

*ஒரு விளையாட்டு வீரனிருப்பான்*
அவனுக்கு உடல் நலன் மட்டுமே முக்கியமன்றி
*பெளதீகவியல் புள்ளியியல்* முக்கியமில்லை.

பரீட்சையில் அதிக புள்ளி எடுத்தால் *சிறந்த பிள்ளை*.. எடுக்காவிட்டால்.......?

தயவு செய்து அவர்களது தன்நம்பிக்கையைப் பறித்து விடாதீர்கள்.

சொல்லுங்கள் அவர்களுக்கு இது வெறும் ஒரு பரீட்சை மட்டுமே.

நீ வாழ்கையில் வெற்றி கொள்ளக்கூடிய இதை விட *பெரிய சவால்கள்*் நிறைய உள்ளன.

உன் மீதுள்ள *என் அன்பு* நீ பரீட்சையில் எடுக்கும் மார்க்கை வைத்து தீர்மானிப்பதில்லை.

என்றும் *நீ என் பிள்ளைதான்* *என் உயிர தான்* என்று சொல்லிப் பாருங்கள் பரீட்சையில் மார்க் எடுக்காத உங்கள் பிள்ளை *ஒரு நாள் உலகை வெல்வான்*்.

வெறுமனே ஒரு பரீட்சையின் அதன் மதிப்பெண்கள் ,  உங்கள் பிள்ளையின் கணவை மற்றும் திறமைகளை அழித்து விடக்கூடாது.

*வைத்தியர்களும் பொருயியலாலர்களும்* மட்டுமே உலகில் சிறந்தவர்கள், மகிழ்ச்சியாய் இருப்பவர்கள் என தயவு செய்து நினைக்காதீர்கள்.

உங்களுக்கும் பிள்ளைகளுக்கும் எமது நல்வாழ்த்துக்கள்.