பெ.நா.பாளையம்: தமிழ்நாடு அரசு பணியாளர்
தேர்வாணையம் வாயிலாக, வி.ஏ.ஓ., பதவி
காலியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு, வரும், 28ம்
தேதி நடக்கிறது.
இவர்களுக்கான இலவச பயிற்சி வகுப்பு, கோவை
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உள்ள
தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில், சிறந்த
வல்லுனர்களை கொண்டு அளிக்கப்படுகிறது.
இதில், பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் கோவை மாவட்ட
வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுகலாம்.
வகுப்புகள், அலுவலக வேலைநாட்களில் தினமும்,
பிற்பகல், 2:00 மணி முதல் மாலை, 5:00 மணி நடக்கிறது.