Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Saturday, May 16, 2015

ஆய்வக பொருள் தயாரிப்பு உரிமையாளர் மீது வழக்கு

கரூரில், மும்பையில் உள்ள நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி, போலியாக ஆய்வக
பொருள் தயாரித்து விற்கப்படுவதாக, கரூர் டவுன் போலீஸில் புகார்
செய்யப்பட்டது. கரூர், செங்குந்தபுரத்தில் டைமன் சயின்டிபிக் இன்டஸ்ரிஸ்
என்ற ஆய்வக நிறுவனம் செயல்படுகிறது. இந்நிறுவனம், மும்பை பிராபில் என்ற
ஆய்வக பொருள் தயாரிப்பு நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி, ஆய்வகங்களுக்கான
(லேப்) பொருள் தயாரித்து விற்பனை செய்துள்ளனர். இது குறித்து தகவல்
அறிந்த நிறுவனத்தின் மேலாளரான மும்பை பந்தரா சித்ரபுரியை சேர்ந்த சகானி,
58, கரூர் டவுன் போலீஸில் புகார் செய்தார். புகார்படி, டைமன் சயின்டிபிக்
நிறுவன உரிமையாளர் முருகேசன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.