திட்டமிட்டபடி
ஜுன் 1-ம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என சென்னையில்
பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர் சபீதா தெரிவித்துள்ளார். கொளுத்தும்
வெயிலால் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதில் மாற்றமில்லை என
பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் சென்னை உள்பட 10
மாவட்டத்தில் 100 டிகிரிக்கு மேல் வெயில் வறுத்தெடுக்கிறது மேலும்
சென்னையில் நேற்று மட்டும் 108.3 டிகிரி வெயில் கொளுத்தியதால் மக்கள்
அவதிக்குள்ளாகி உள்ளனர்.வறுத்தெடுக்கம் வெயிலால் பள்ளிகள் திறப்பு
தள்ளிப்போகும் என பெற்றோர்கள் எதிர்பார்த்தனர். புதுச்சேரியில்
சுட்டெரிக்கும் வெயிலை அடுத்து பள்ளிதிறப்பு ஜுன் 12-ம் தேதிக்கு
தள்ளிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.