மின்னணு சுங்க கட்டண முறை விரைவில்
அமலுக்கு வரும் என மத்திய தரைவழி போக்குவரத்து
துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
மும்பையில் நடைபெறும் 'மேக் இன் இந்தியா' திட்ட
வாரவிழாவில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் நிதின்
கட்காரி தெரிவித்ததாவது: சுங்கச்சாவடிகளில்
வாகனங்கள் வரிசையாக நின்று கட்டணம் செலுத்தும்
முறை முடிவுக்கு வர உள்ளது. 360 சுங்கச்சாவடிகளில்
வரும் ஏப்ரல் மாதத்திற்குள் மின்னணு சுங்க கட்டண
முறை நடைமுறைக்கு வர உள்ளது. இந்த
எண்ணிக்கையானது பின் படிப்படியாக அதிகரிக்கப்படும்.
இதற்காக இரு வங்கிகளுடன் ஒப்பந்தம்
போடப்பட்டுள்ளது.
தற்போது 96 ஆயிரம் கி.மீ., ஆக உள்ள தேசிய
நெடுஞ்சாலையின் துாரத்தை, அடுத்த 3 மாதத்திற்குள்
1.52 லட்சம் கி.மீ., உயர்த்த மத்திய அரசு இலக்கு
நிர்ணயித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.