இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலையில் (இக்னோ) ஜன., 2017ம் கல்வியாண்டிற்கான முதுநிலை, இளநிலை, பட்டயம் மற்றும் சான்றிதழ் ஆகிய படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க, டிச., 30ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
கோவை ஜி.ஆர்.டி., கல்லுாரியில் அமைந்துள்ள இக்னோ ஒருங்கிணைப்பு மையத்தில் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள், மாணவர்களுக்கு வினியோகிக்கப்படுகின்றன.
பணமில்லா பரிவர்த்தனைக்காக, www.ignou.ac.in என்ற இணையதளத்தில் ஆன்-லைன் மூலம் விண்ணப்பம் உள்ளிட்ட கட்டணங்களை செலுத்தலாம். தாழ்த்தப்பட்ட பழங்குடியின மாணவர்களுக்கு இளநிலையில் குறிப்பிட்ட பாடங்களுக்கு கட்டண சலுகை அளிக்கப்படுகிறது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, டிச., 30ம் தேதிக்குள் சமர்ப்பிக்கவேண்டும். மேலும், விபரங்களுக்கு, 0422-2592399, 2572719 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.