தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 5-ம் தேதி
முதல் பிளஸ் 2 தேர்வுகள் தொடங்கி நடைபெற்று
வருகின்றன. மொழிப்பாடம், ஆங்கிலப் பாடத் தேர்வுகள்
நிறைவடைந்துள்ள நிலையில், முக்கிய பாடங்களுக்கான
தேர்வுகள் நடைபெற்று வருகின்றது.
அந்த வகையில், தொழிற்பாடப் பிரிவுகளுக்கான
கட்-ஆஃப் மதிப்பெண்களை நிர்ணயிக்கும் பிரதான
பாடங்களில் ஒன்றான பிளஸ் 2 கணிதத் தேர்வு
வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கணிதத் தேர்வில் வினாக்களை எதிர்கொள்ளும் வகையில்
எளிமையாக இருந்ததாக மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி
தெரிவித்துள்ளனர்