Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Saturday, March 26, 2016

10ம் வகுப்பு விடை திருத்தம் ஏப். 15ல் துவக்கம்:கருணை மதிப்பெண் எதிர்பார்ப்பு.

தமிழகத்தில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்
திருத்தம், ஏப்., 15 முதல்துவங்குகிறது. 'தமிழ் தேர்வில்
இடம்பெற்ற குழப்பமான வினாக்களுக்கு, கருணை
மதிப்பெண் வழங்க வேண்டும்' என, கோரிக்கை
எழுந்துள்ளது.பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், முக்கிய
பாடங்களின் தேர்வுகள், ஏப்., 11ல் முடிகின்றன.
விருப்ப மொழி பாடத்துக்கு, ஏப்., 13ல் தேர்வு நடக்க
உள்ளது. இதையடுத்து, ஏப்., 15 முதல் விடைத்தாள்
திருத்தும் பணிகள் துவங்குகின்றன. அனைத்து
தேர்வுகளுக்கும், ஒரே நேரத்தில் விடைத்தாள் திருத்தும்
பணி துவங்கும் என, தேர்வுத்துறை வட்டாரங்கள்
தெரிவித்துள்ளன.இந்த நிலையில், தமிழ் தேர்வில்
இடம்பெற்ற குழப்பமான வினாக்களுக்கு கருணை
மதிப்பெண் வழங்க வேண்டும் என, கோரிக்கை
எழுந்துள்ளது.