பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் இறுதி கட்டத்தை
எட்டியுள்ளன. கணிதம் மற்றும் அறிவியல் பிரிவுக்கு,
ஏப்., 1ல் இயற்பியல் தேர்வும்; கணித பதிவியல்
மாணவர்களுக்கு பொருளியல் தேர்வும் நடக்கிறது.
அத்துடன்,
பிளஸ் 2 தேர்வுகள் முடிகின்றன. மற்ற பிரிவு
மாணவர்களுக்கு, மார்ச், 28ல் தேர்வுகள் முடிந்து விட்டன.
மே முதல் வாரத்தில் இருந்து, ஆசிரியர்கள் தேர்தல்
பணிக்கு செல்ல வேண்டி உள்ளது.அதனால், ஏப்., 18க்குள்
விடைத்தாள் திருத்தப்பட்டு, 20 முதல், 25க்குள்,
மதிப்பெண் ஒருங்கிணைப்பு, கணினி வழி மதிப்பெண்
சரிபார்த்தலும் முடிக்கப்படும். ஏப்., 29 அல்லது மே, 2ல்
தேர்வு முடிவுகள் வெளியாகும் என, தேர்வுத்துறை
வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.