Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Thursday, December 24, 2015

காணத்தவறாதீர்கள் 38 ஆண்டுகளுக்கு பிறகு கிறிஸ்துமஸ் நாளன்று வானில் தோன்றும் பெளர்ணமி !

38 ஆண்டுகளுக்குப் பிறகு கிறிஸ்துமஸ் தினமான டிசம்பர் 25 ஆம் தேதி முழுநிலவு (பௌர்ணமி) வருகிறது என அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா அறிவித்துள்ளது.
முன்னதாக 1977 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் நாளன்று வானில் தோன்றியதாகவும், தற்போது 38 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் டிசம்பர் 25 ஆம் தேதி முழுநிலவு (பௌர்ணமி) வருகிறது என அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா அறிவித்துள்ளது.


மேலும் இதுபோன்ற அரிய நிகழ்வு இனி 2034 ஆம் ஆண்டுதான் நடைபெறும் என குறிப்பிட்டுள்ள நாசா, பொதுமக்கள் இந்நிகழ்வை தவற விடவேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளது.நடப்பு ஆண்டின் கடைசி பௌர்ணமியாகவும், குளிர்காலத்தின் தொடக்கத்தில் தெரியும் முதல் பௌர்ணமியான அது முழு குளிர் நிலவு' (Full Cold Moon) என்றழைக்கப்படும்.
சந்திரனை ஆராயும் நாசாவின் (Lunar Reconnaissance Orbiter- LRO) பணி மூலம் கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் நிலவின் மேற்பரப்பு குறித்து ஆராய்ச்சி செய்யப்பட்டு வருகிறது.
எல்ஆர்ஓ பணி மூலம் அதிக திறன்வாய்ந்த 7 கருவிகள் மூலம் நிலா குறித்த தரவுகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. தற்போதும் கிறிஸ்துமஸ் நாளன்று நிகழும் அரிய நிகழ்வும் ஆராயப்படும் என நாசா அறிவித்துள்ளது.
அந்த அதிசய நிகழ்வு கிறிஸ்துமஸ் தினத்தன்று இரவு 11.11 மணிக்கு முழு உச்சத்தை அடைந்து பிரகாசமாக காட்சி அளிக்கும் என்றும் நாசா தெரிவித்துள்ளது.