மும்பையில் நடைபெற்ற பண்டாரி கோப்பைக்கான பள்ளிகளுக்கான கிரிக்கெட்
போட்டியில், கே.சி.காந்தி பள்ளி சார்பில் களமிறங்கிய பிரனவ் தனவேட் எனும்
இளம் வீரர், 652 ரன்களை குவித்து உலக சாதனை புரிந்தார். இவர் 652 ரன்களை
எடுக்க வெறும் 199 பந்துகளே எடுத்துக்கொண்டு, நாட்அவுட்டாக உள்ளார். இதில்
78 பவுண்டரிகளும், 30 சிக்சர்களும் அடங்கும். இவரின் அணி முதல் நாள் ஆட்ட
நேர முடிவில், ஒரு விக்கெட் இழப்பிற்கு 956 ரன்களை குவித்துள்ளது. 1899ம்
ஆண்டு ஆர்தர் காலின்ஸ் எனும் இங்கிலாந்து வீரர் 628 ரன்கள் குவித்ததே
முந்தைய உலக சாதனை