வேட்டி நாள் என்பது வேட்டி கட்டுவதை
இளைஞர்களிடம் ஊக்குவிக்கும் விதமாக ஜனவரி மாதம் 6–ந்தேதி (நாளை) வேட்டி
தினம் என்று கொண்டாட துவங்கியுள்ளனர் இதை துவக்கியது யார் என்பதில் சரியான
கருத்தொற்றுமை இல்லை.
கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் செயல் இயக்குநராக இருந்த சகாயம் ஐ. ஏ. எஸ். பொங்கலை ஒட்டி வேட்டிதினம் கொண்டாடுவோமே என ஆலோசனை சொன்னார்.
பள்ளிகள், கல்லூரிகள், மற்றும் அலுவலகங்களில் வேட்டி கட்டிக்கொண்டு
தங்களின் வேட்டி தினத்தைக் கொண்டாடினர்.
2015 சனவரி 6 அன்று வேட்டி தினம்
என்று அறிவிக்கப்பட்டு வேட்டி தினம் கொண்டாடப்பட்டது. www.tnpgtakarurdt.blogspot.in
தமிழரின் பாரம்பரிய உடையான வேட்டிக் கட்டிக்கொண்டு உள்ளே நுழைய சில
கிளப்புகளில் அனுமதி மறுப்பதாக சர்ச்சை ஏற்பட்டது.
அதன்பிறகு தமிழக அரசு
வேட்டிகட்டி வரக்கூடாது என்று தடைவிதிக்கும் கிளப்புகளின் உரிமம் இரத்து
செய்யப்படும் என்று சட்டம் இயற்றியது