ஐ.நா. சபையில் கடந்த 2012–ம் ஆண்டு ரியோடி
ஜெனிராவில் நடந்த கூட்டத்தில் பொது செயலாளர் பான்
கீ–மூன் பசி இல்லா சமுதாயத்தை உருவாக்க என்னென்ன
உணவு பாதுகாப்பு திட்டங்களை மேற்கொள்ளலாம்
என்பது குறித்து ஆராய பசி இல்லா சமுதாய திட்டம்
ஒன்றை உருவாக்கினார்.இந்த திட்டத்தில் உலகம்
முழுவதும் இருந்து பல்வேறு விஞ்ஞானிகள்
நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் உயர்மட்ட ஆலோசகராக
சென்னை எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன
முதன்மை விஞ்ஞானி பரசுராமன்
நியமிக்கப்பட்டுள்ளார்.இதற்கான அதிகாரப்பூர்வ
அறிவிப்பை இந்த திட்ட தலைவர் நபீகா எம்.காஜி சார்பில் வெளியிட்டார்.