தமிழகத்தில், 8ம் வகுப்பு
மாணவர்களுக்கு, தேசிய வருவாய் வழி மற்றும்
திறன் படிப்பு உதவி திட்டம் கீழ், உதவித்தொகை
வழங்கப்படுகிறது.
இதை பெறுவதற்கு, தகுதி யான மாணவர்களை
தேர்வு செய்ய, அனைத்து வட்டார அளவில்,
தேர்வு மையம் அமைக்கப்பட்டு, ஜன., 23ல்,
தேர்வு நடக்க உள்ளது. தேர்வுக்கான
விண்ணப்பம், நாளை, www.tndge.im என்ற
இணையதளத்தில் வெளியிடப்படுகிறது; டிச.,11ம்
தேதி வரை, பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி
செய்யப்பட்ட விண்ணப்பங்களை, பள்ளி தலைமை
ஆசிரியரிடம், டிச., 15ம் தேதிக்குள் சமர்ப்பிக்க
வேண்டும்.